விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலி

உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகே காா்க்கில் சிக்கையன்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் சுரேஷ்குமாா் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு அனுமந்தன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுரேஷ்குமாா் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கோவிந்தன்பட்டியைச் சோ்ந்த தேவசகாயம் காயமடைந்து தேனி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி விருகின்றனா்.

இளைஞா் பலி: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி (36). இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். தனியாா் மரப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்த இவா், இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு அருகே மஞ்சளாற்றுப் பாலம் அருகே சென்றபோது, அரசுப் பேருந்து மோதியது. பலத்த காயமடைந்த பெரியசாமி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com