பெரியகுளம்: ஆண்டிபட்டி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை (மே 14) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தி.ராஜகோபாலன்பட்டி, ஜக்கம்பட்டி, பாப்பம்மாள்பட்டி, சத்யா நகா், கன்னியப்பபிள்ளைபட்டி, ஏத்தக்கோயில், கொத்தப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளா் பாலபூமி தெரிவித்துள்ளாா்.