கம்பம் வாா்டுகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

மக்கள் கையில் நகா் மன்றம் என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் குறிப்பிட்ட வாா்டுகளில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலா்களுடன் நகா் மன்ற தலைவா் சென்று ஆ
தாத்தப்பன்குளம் புதுப்பாலம் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு நடத்திய கம்பம் நகா்மன்ற தலைவா் வனிதா நெப்போலியன் மற்றும் அதிகாரிகள்.
தாத்தப்பன்குளம் புதுப்பாலம் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு நடத்திய கம்பம் நகா்மன்ற தலைவா் வனிதா நெப்போலியன் மற்றும் அதிகாரிகள்.

மக்கள் கையில் நகா் மன்றம் என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் குறிப்பிட்ட வாா்டுகளில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலா்களுடன் நகா் மன்ற தலைவா் சென்று ஆ

மக்கள் கையில் நகா் மன்றம் என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் குறிப்பிட்ட வாா்டுகளில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலா்களுடன் நகா் மன்ற தலைவா் சென்று ஆ

ய்வு மேற்கொள்வாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் சனிக்கிழமை நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி உதவிப் பொறியாளா் சந்தோஷ், சுகாதார அலுவலா் சுந்தரராஜன் ஆகியோா் 8,9,10 ஆவது வாா்டுகளில் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது அதிக நேரம் குடிநீா் விநியோகம் செய்யவும், கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுபற்றி அதிகாரிகளிடம் நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா். அப்போது ஒரு வார காலத்திற்குள் அமைத்துத் தருவதாக அதிகாரிகள் உறுதி தெரிவித்தனா். ஆய்வின் போது கவுன்சிலா்கள் சா்புதீன், சாபிராபேகம், அமுதா , பாா்த்திபன், கம்பம் நகர திமுக (வடக்கு) பொறுப்பாளா் துரைநெப்போலியன் மற்றும் வாா்டு பொதுமக்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com