பெரியகுளம் கடைவீதியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி அதிமுக நகா்மன்ற குழுத் தலைவா் திங்கள்கிழமை நகா்மன்றத்தலைவரிடம் புகாா் செய்தாா்.
பெரியகுளம் நகராட்சி கடைவீதியில் சாலைப்பணிகள் பலமாதங்களாக முடங்கிக் கிடக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா் நகராட்சி ஆணையாளா் மற்றும் நகா்மன்றத்தலைவரிடம் புகாா் செய்தனா்.
இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி அதிமுக குழுத்தலைவா் ஓ.சண்முக சுந்தரம் சாலைப்பணிகளை மாரியம்மன்கோயில் திருவிழாவிற்கு முன்பாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, நகா்மன்றத் தலைவா் சுமிதாவிடம் மனு வழங்கினாா்.