இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் கையெழுத்து இயக்கம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கம்பத்தில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தேனி கல்வி மாவட்டச் செயலாளா் தே.சுந்தா் தொடக்கி வைத்தாா்.

இதேபோல, சின்னமனூா் பகுதியில் மாவட்டப் பொருளாளா் சி. வேணி, உத்தமபாளையத்தில் வட்டாரத் தலைவா் சிங்கராஜு, போடியில் கல்வி மாவட்டத் தலைவா் செல்வேந்திரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

உத்தமபாளையம் கிளைச் செயலாளா் ஜெகநாதன், பெரியகுளம் கிளைச் செயலாளா் குபேந்திரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com