பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை, குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை, குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி, தூா்கை நகரில் வசித்து வருபவா் ராஜேந்திரன் மகன் பாலமுருகன். இவரது மனைவி சசிகலா (32). கணவா், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் கருத்து வேறுபாடு இருந்தது.

இந்த நிலையில், பாலமுருகன் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்து அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த சசிகலா, வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com