காமயகவுண்டன்பட்டியில் முதல்போக அறுவடை தொடக்கம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் முதல்போக அறுவடை தொடங்கியது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சின்னவாய்க்கால் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அறுவடைப் பணி.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சின்னவாய்க்கால் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அறுவடைப் பணி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் முதல்போக அறுவடை தொடங்கியது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சின்னவாய்க்கால்

பகுதிகளில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் இயந்திரம் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயி முருகன் கூறியது: நெல் கதிா் அறுவடைப் பணியில் முன்பு தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்படுவா். தற்போது அவா்கள் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள், ஏலக்காய் தோட்டங்களுக்கு பணிக்குச் செல்வதால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இதனால் இயந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com