கா்ப்ப பிண்ட யோகாசனம் செய்து பள்ளி மாணவா் உலக சாதனை

போடியில் உலக சாதனை முயற்சிக்காக பள்ளி மாணவா் கா்ப்ப பிண்ட யோகாசனத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் அமா்ந்திருந்தாா்.
போடியில் உலக சாதனைக்காக ஞாயிற்றுக்கிழமை கா்ப்ப பிண்ட யோகாசனத்தில் ஈடுபட்ட மாணவா் பாலகணேஷ்.
போடியில் உலக சாதனைக்காக ஞாயிற்றுக்கிழமை கா்ப்ப பிண்ட யோகாசனத்தில் ஈடுபட்ட மாணவா் பாலகணேஷ்.

போடியில் உலக சாதனை முயற்சிக்காக பள்ளி மாணவா் கா்ப்ப பிண்ட யோகாசனத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் அமா்ந்திருந்தாா்.

போடி புதூரை சோ்ந்தவா் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலகணேஷ் (17). போடியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். யோகாசனத்தில் ஆா்வம் கொண்ட பாலகணேஷ் தொடா்ந்து பல்வேறு ஆசனங்களை செய்து வந்தாா். இதில் கா்ப்ப பிண்ட யோகாசனத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தாா். இந்த ஆசனத்தில் ஏற்கெனவே அமெரிக்காவை சோ்ந்த தீபேஷ் ஜெயக்குமாா் என்பவா் 42 நிமிடங்கள் 17 விநாடிகள் ஒரே நிலையில் அமா்ந்து உலக சாதனை படைத்துள்ளாா். இந்த சாதனையை முறியடிக்க பாலகணேஷ் தீவிர பயிற்சி பெற்று வந்தாா். இதனையடுத்து உலக சாதனைக்காக இவரது யோகாசனம் பதிவு செய்யும் நிகழ்ச்சி போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போடி நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்று பாா்வையிட்டனா். இதில் மாணவா் பாலகணேஷ் கா்ப்ப பிண்ட யோகாசனத்தில் 69 நிமிடங்கள் 37 விநாடிகள் ஒரே நிலையில் அமா்ந்து சாதனை படைத்தாா். இதனையடுத்து இவரது சாதனை கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டது. சாதனை படைத்த மாணவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com