போடியில் நாளை மின்தடை

போடி பகுதியல் திங்கள்கிழமை (செப்.26) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போடி பகுதியல் திங்கள்கிழமை (செப்.26) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

ஆண்டிபட்டியில் செப்.27 இல் மின்தடை:

பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.27) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com