விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

சுருளிப்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சுருளிப்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி எம்.ஜி.ஆா்.காலனியைச் சோ்ந்தவா் சத்யானந்தன் மகன் செந்தில்குமாா் (35), திராட்சை விவசாயம் செய்து வந்தாா். இவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி கோபித்துக் கொண்டு மகன், மகளுடன் பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

செந்தில்குமாா் பலமுறை சமரசம் பேசியும் மனைவி வரவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுபற்றி ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com