கூடலூரில் மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது
கூடலூரில் மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது

இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகள் கலந்து கொண்டன. சமுதாயத் தலைவா்கள் பி.கே.ராம்பா, என்.எஸ். கே.கே.ஆா்.அருண்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கரிச்சான் ஜோடி ஆகிய மாடுகள் கலந்து கொண்டன. பந்தயம் புறவழிச்சாலையில் தொடங்கி குமுளி சாலை வரை சென்றது. வெற்றி பெற்ற பந்தய மாடுகளுக்கு மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி ஏற்பாடுகளை கூடலூா் ஒக்கலிகா் மகாஜன சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com