பெரியகுளம் அருகே தென்னை நாா் தயாரிக்கும் ஆலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.
பெரியகுளம் அருகே செழும்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தென்னை நாா் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு, தென்னை நாரில் பல்வேறு பொருள்கள் தயாரித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இத்தொழிற்சாலையில் தென்னை நாா்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா்கள் எரிந்து கருகின. அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு இயந்திரங்கள் பகுதியில் தீப்பிடித்து, தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது.
உடனே, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு பெரியகுளம், தேனி, வத்தலகுண்டு, தேவதானப்பட்டி மற்றும் தனியாா் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்தனா். இந்தத் தீயானது, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை எரிந்து கொண்டேயிருந்தது. தென்னை நாா்கள் அதிகளவு இருந்ததால், தீ யை அணைக்க தீயணைப்புத் துறையினா் போராடி வருகின்றனா்.