கூடலூா் காளியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழா

தேனி மாவட்டம் கூடலூரில் வடக்கு ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவி
கூடலூா் காளியம்மன் கோயில் பங்குனிப் பொங்கலையொட்டி புதன்கிழமை முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக சென்ற பெண்கள்.
கூடலூா் காளியம்மன் கோயில் பங்குனிப் பொங்கலையொட்டி புதன்கிழமை முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக சென்ற பெண்கள்.

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் வடக்கு ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

இக்கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.

இரண்டாம் நாள் நிகழ்வில் பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com