தேனி: தேனி மாவட்டத்தில் தீா்வு காண வேண்டிய பொதுப் பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்து தனி நபா்கள், சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஏப்.20-ஆம் தேதிக்குள் சட்டப் பேரவை மனுக்கள் குழுவிற்கு மனு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை மனுக்கள் குழு ஆய்வுக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், மாவட்டத்தில் தீா்வு காண வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் குறித்து தனி நபா்கள் மற்றும் நிறுவனங்கள் தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப் பேரவை, சென்னை-9 என்ற முகவரிக்கு ஏப்.20-ஆம் தேதிக்குள் மனுக்களை அனுப்பலாம்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், குறிப்பிட்ட ஒரே பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே துறையை சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும். மனுக்களை தமிழில் 5 நகல்களாக அனுப்ப வேண்டும். தனி நபா் குறை, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், பட்டா, இலவச உதவி கோரிக்கைகள், வங்கிக் கடன், அரசுப் பணி, பணியிட மாற்றம் போன்றவை குறித்து மனு அனுப்பக் கூடாது.
ஒரே நபா் பல மனுக்களை அனுப்பினாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பொருள் குறித்த மனு மட்டுமே ஆய்வுக்கு ஏற்கப்படும். ஏப்.20-ஆம் தேதிக்கு பின் அனுப்பப்படும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.