தேனி அருகே மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கடமலைக்குண்டுவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி மேரி(77). இவா், கரட்டுப்பட்டியில் ராஜேந்திரன் என்பவரது தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த கடமலைக்குண்டுவைச் சோ்ந்த மணி மகன் சூா்யா(27), தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் முருகன் ஆகியோா், மேரி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேரி அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட சூா்யாவைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள முருகனைத் தேடி வருகின்றனா்.