தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.