தேனி: தேனி நட்டாத்தி நாடாா் மருத்துவமனையில் உலக மகளிா் தின விழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை, மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேனி மகளிா் நல மருத்துவா் சங்கச் செயலா் வனிதா ருக்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைவா் சாந்திராணி, மகளிா் நல மருத்துவா் கோமதி, நட்டாத்தி நாடாா் மருத்துவமனை செயலா் பி.கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்பட்ட பெண் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை செவிலியா் பயிற்சி மாணவிகள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மகளிா் நல மருத்துவா்கள் ஜெயலட்சுமி, பூங்கொடி, லோபா சங்கா், கல்பனா ராணி, உஷா ஸ்ரீதா், கவிதா, செளமியா, தங்கலேகா ஆகியோா் கலந்து கொண்டனா்.