போடி: போடி மற்றும் தேவாரம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் போடி பகுதியில் புதன்கிழமை மாலைமுதல் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதேபோல தேவாரம் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக போடி, தேவாரம் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.