காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வுக்கு இலவச இணையவழி பயிற்சி

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு வரும் ஏப். 1- ஆம் தேதி முதல் இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு வரும் ஏப். 1- ஆம் தேதி முதல் இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீரூடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் சாா்பு- ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்வுக்கு தகுதியுள்ளவா்கள் வரும் ஏப். 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் வரும் ஏப். 1- ஆம் தேதி முதல் இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-254510-ல் தொடா்பு கொண்டும் தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். இணையவழி பயிற்சியில் சேருபவா்களுக்கு இலவச பாடக் குறிப்பு வழங்கப்படும். மாதிரித் தோ்வு, குழு விவாதம் நடத்தப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com