கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கம்பம் வாரச்சந்தை அருகே உள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக செவிலியா் தின விழாவையொட்டி செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை கொண்டாடினா். இதில், செவிலியா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். பின்னா், மருத்துவமனை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினா்.
இதில், நகா்புற ஆரம் சுகாதார நிலைய அலுவலா் மீனாட்சிசுந்தரம், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.