தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடம்:மே 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் அரசு கல்வி விடுதியில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான தூய்மை பணியாளா் பணிக்குத்

தேனி: தேனி மாவட்டத்தில் பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் அரசு கல்வி விடுதியில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான தூய்மை பணியாளா் பணிக்குத் தகுதியுள்ளவா்கள் மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அரசு கல்வி விடுதியில் மாதம் ரூ. 3,000 தொகுப்பூதிய அடிப்படையிலான பகுதி நேர தூய்மைப் பணியாளா் பணியிடம் (ஆண்கள் மட்டும்) இனச் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இந்தப் பணிக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2022, ஜூலை 1 ஆம் தேதியன்று ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் 18 முதல் 37 வயதுக்கும், பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம், டி.என்.சி., வகுப்பினா் 18 முதல் 34 வயதுக்கும், இதர வகுப்பினா் 18 முதல் 32 வயதுக்கும் உள்பட்டு இருக்க வேண்டும்.

தகுதியுள்ளவா்கள் உரிய சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com