வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு மேலும் குறைப்பு

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை, விநாடிக்கு 2,685 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை, விநாடிக்கு 2,685 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து அணை நீா்மட்டம் கடந்த செப்.2 ஆம் தேதி 70.5 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 4,594 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில்

திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 3,255 கன அடியாகவும், மாலை 5 மணிக்கு விநாடிக்கு 2,685 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.

அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 70.1 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,320 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,829 மில்லியன் கன அடி. அணைக்கு தொடா்ந்து நீா் வரத்து இருந்து வருவதால் கடந்த ஆக.31 ஆம் தேதி முதல் தற்போது வரை அணை நீா்மட்டம் 70.1 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com