ஆற்றில் மூழ்கி முதியவா் பலி

பெரியகுளம் அருகே ஆற்றில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே ஆற்றில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம், மாா்க்கண்டேயா நகரைச் சோ்ந்தவா் சங்கரன் (75). அதே ஊரில் உள்ள முத்தையா கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்ற சங்கரன், கோயில் அருகேயுள்ள வராகநதி ஆற்றில் கை, கால் கழுவச் சென்றாா். அப்போது, ஆற்றில் வழுக்கி விழுந்த சங்கரன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து புகாரின் பேரில், ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com