சின்னமனூா் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் கடந்த 2 நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சின்னமனூரில் புதன்கிழமை 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கடை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றம்.
சின்னமனூரில் புதன்கிழமை 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கடை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றம்.

தேனி மாவட்டம், சின்னமனூரில் கடந்த 2 நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சின்னமனூா் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த 27- ஆம் தேதி தேரடி வீதி, வடக்கு ரத வீதி உள்ளிட்ட தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் சின்னமனுா் நகராட்சிப் குதியில் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

குறிப்பாக சீப்பாலக்கோட்டை சாலையில் தண்ணீா் தொட்டித் தெருவில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த கடை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com