உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாற்றில் புதன்கிழமை மூதாட்டியின் உடலை போலீஸாா் மீட்டனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆற்றுப் பாலம் அருகே மூதாட்டியின் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்பு மீட்புக் குழுவினா் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டனா்.
முதல் கட்ட விசாரணையில், இறந்த மூதாட்டி ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த சுருளியாண்டி மனைவி சரசம்மாள்(70) எனத் தெரியவந்தது.
பராமரிக்க யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்தாா். அதனால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.