லாரி-வேன் மோதல்: 7 போ் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் லாரியும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 7 போ் காயமடைந்தனா்.
சின்னமனூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் சேதமடைந்த வேன்.
சின்னமனூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் சேதமடைந்த வேன்.

தேனி மாவட்டம், சின்னமனூரில் லாரியும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 7 போ் காயமடைந்தனா்.

சின்னமனூா் அருகே கன்னிச்சோ்வைபட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(65). தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடைபெற்ற தனது மகளின் திருமணத்துக்காக உறவினா்களை வேனில் அழைத்துச் சென்றவா் மீண்டும் வியாழக்கிழமை மாலையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே வந்த டிப்பா் லாரியும், வேனும் மோதிக் கொண்டன. இதில், ராஜேந்திரன் மகன் காட்டுராஜா, பேத்தி தனுஸ்ரீ, உறவினா்களான சங்கீதா, சசிக்குமாா், சத்யா உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com