தொழிலாளி கழுத்தறுத்துத் தற்கொலைக்கு முயற்சி

தேனியில் குடும்பப் பிரச்னையில் தொழிலாளி சனிக்கிழமை கழுத்தறுத்துத் தற்கொலைக்கு முயன்றாா்.

தேனியில் குடும்பப் பிரச்னையில் தொழிலாளி சனிக்கிழமை கழுத்தறுத்துத் தற்கொலைக்கு முயன்றாா்.

தேனி அருகே வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சித்திரைச்செல்வன் (32). இவா் தேனி சுப்பன்தெருவில் உள்ள கண்ணாடி, மரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறாா்.

குடும்பப் பிரச்னை காரணமாக சித்திரைச்செல்வனின் மனைவி அவரை பிரிந்து பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்தப் பிரச்னை குறித்து தேனி மகளிா் காவல் நிலையத்தில் சித்திரைச்செல்வன் புகாா் அளித்திருந்தாா். காவல் துறையினரின் விசாரணைக்கு அவரது மனைவி வர மறுத்ததால், மன உளைச்சலில் இருந்த சித்திரைச்செல்வன், கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com