போடி அருகே மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
போடி குரங்கணியைச் சோ்ந்தவா் பி.டி.ரவி மகன் வெற்றிச்செல்வன் (18). போடியில் உள்ள கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வந்த இவா், கடந்த 1-ஆம் தேதி இரவு குரங்கணியிலிருந்து போடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
போடி-குரங்கணி சாலையில் கட்டப்பாலம் என்ற பகுதியில் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் வெற்றிச்செல்வன் பலத்த காயமடைந்தாா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிச்செல்வன் சனிக்கிழமை காலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.