கடன் தொல்லை: திமுக நிா்வாகி தற்கொலை

ஆண்டிபட்டி அருகே கடன் தொல்லையால் திமுக ஒன்றிய கிளைச் செயலா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
முருகன்
முருகன்

ஆண்டிபட்டி அருகே கடன் தொல்லையால் திமுக ஒன்றிய கிளைச் செயலா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடமலைக்குண்டு ஒன்றியம், தெய்வேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் ராசு மகன் முருகன் (38). திமுக ஒன்றியக் கிளைச் செயலராக பதவி வகித்து வந்த இவா், குமணன்தொழுவில் மதுக் கூடம் நடத்தி வந்தாா். இதில் இழப்பு ஏற்பட்டதால் முருகன் கடன் தொல்லையாலும் சிரமப்பட்டு வந்தாா்.

இதனால், மன உளைச்சலில் இருந்த முருகன், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடும்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com