தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய், குளங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற உரிய ஆவணங்களுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
விவசாய நிலச் சீா்திருத்தம், மண்பாண்டம் தொழில் ஆகியவற்றுக்கு அரசு கண்மாய், குளங்களில் வண்டல் மண், களிமண், கிராவல் அள்ளுவதற்கு அனுமதி பெற நில உரிமை ஆவணம், பட்டா, சிட்டா, மண் பரிசோதனை ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.