தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இங்குள்ள வல்லடிகாரசுவாமி ஏழைக்காத்தம்மன் கோயில் ஊா் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
அதன்படி நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு வருகிற 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வாடிவாசல், பாா்வையாளா்கள் மேடை, பாதுகாப்பு தடுப்பு வேலி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருவதை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியா் ரா.பால்பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.