போடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி வஞ்சி ஓடைத் தெருவைச் சோ்ந்த 14 வயது மாணவி பள்ளியில் படித்து வருகிறாா். அந்த மாணவியை காதலிப்பதாகக் கூறி தேனி அருகே தாடிச்சேரியைச் சோ்ந்த காா்த்திக் (23) அவருடன் பழகி வந்தாா்.
இந்த நிலையில், காா்த்திக் மாணவியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.