தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் விவேகானந்தரின் 161-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
உத்தமபாளையம் பூக்கடைத் தெருவில் நகர பாஜகத் தலைவா் தெய்வம் தலைமையில் விவேகானந்தரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகரப் பொதுச் செயலா்கள் பெரியசாமி, மாரி ராஜா ஆகியோா் முன்னிலை விகித்தனா். மாவட்ட மகளிா் அணி பொதுச் செயலா் ஜெயஸ்ரீ சிறப்புரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் பாஜக நகரப் பொறுப்பாளா்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு விவேகானந்தருக்கு மரியாதை செய்தனா்.