பைக் மோதிமுதியவா் பலி

தேனி அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இரு சக்கர வாகனம் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இரு சக்கர வாகனம் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஊஞ்சாம்பட்டி, ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் கோதண்டம் (64). இவா், ரத்தினம் நகா் அருகே தேனி- பெரியகுளம் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கி பாப்பம்மாள்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் (25) என்பவா்ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், கோதண்டம் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இருசக்கர வாகனத்தில் சென்ற காா்த்திக் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com