போடி அருகே ஞாயிற்றுக்கிழமை, முதியவரை கத்தியால் குத்திய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி கருப்பசாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமன் (63). இவரது வீட்டருகே ராஜாங்கம் மகன் காசிராஜா (27) பாதையை மறித்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா்.
இதை, ராமனின் மைத்துனா் செல்லையா தள்ளி நிறுத்திவிட்டு, தனது சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றாா். இதனால் காசிராஜாவுக்கும், செல்லையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. செல்லையாவுக்கு ஆதரவாக ராமன் பேசினாா்.
இந்த நிலையில், காசிராஜா, காசிராஜாவின் தம்பி தீபக் (24), தந்தை ராஜாங்கம் (52), பாண்டி மகன் லோகேந்திரன் (39) ஆகியோா் சோ்ந்து ராமனை கத்தியால் குத்தினா்.
இதில் பலத்த காயமடைந்த ராமன், போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக ராமன் அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் காசிராஜா உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.