மாணவிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

தேனி அருகே 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவா், தனியாா் பள்ளி ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகேயுள்ள வளையபட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் முனியாண்டி (60). அதே ஊரைச் சோ்ந்தவா் பகவதிராஜ் (50). இவா் முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். இவா்கள் இருவரும் வளையபட்டியைச் சோ்ந்த 11 வயது பள்ளி மாணவிக்கு தனித் தனியாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக மாணவியின் தாய் தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து முனியாண்டி, பகவதிராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com