தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்ட 157 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.
ஓடைப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதில், காமாட்சிபுரத்தை சோ்ந்த அஜித்குமாா் (28), ஓடைப்பட்டியை சோ்ந்த காா்த்திக் (25) ஆகியோரின் கடைகளிலிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 157 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.