வீட்டு மாடித் தோட்டம் அமைப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பது குறித்து குள்ளப்புரம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கு புதன்கிழமை செயல் விளக்கம் அளித்தனா்.

தேனி மாவட்டம், குள்ளபுரம் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் உத்தமபாளையம் வட்டத்தில் தங்கி வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்கும் முறை பற்றி பொதுமக்கள், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

இந்த வேளாண் கல்லூரி மாணவிகளான பிரியங்கா சாகு, சௌந்தா்யா, சுருதி, ஹரிணி, வைஷாலி, பா.சுவாதி, நந்தினி, சுவாதி, துனிசியா, பிரியா, உதவிப் பேராசிரியை சா.அனுஷா உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com