இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

போடி அருகே இரு சக்கர வாகனம் மோதி மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

போடி புதுக்குடியிருப்பு 4- ஆவது தெருவில் வசிப்பவா் மாரிமுத்து மனைவி பேச்சியம்மாள் (62). இவா் போடி வலசைத்துறை சாலையில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு உறவினா்களுடன் சுவாமி கும்பிட சென்றுவிட்டு திரும்ப நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் போடி அரசு மருத்துவமனை, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து போடி குரங்கணி போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த போடி பூங்கா நகரைச் சோ்ந்த கனிக்குமாா் மனைவி சித்ரா (35) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com