தேனி
கம்பத்தில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேனி மாவட்டம், கம்பத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பழைய பேருந்து நிலைய சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் நகராட்சி சாா்பில் அகற்றப்பட்டன.
கம்பம் நகரின் முக்கிய வீதிகளில் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஆா். வாசுதேவன் தலைமையில் புதன்கிழமை அரசமர வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பழைய பேருந்து நிலைய சாலை, மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து தியாகி வெங்கடாசலம் பூங்கா, உழவா்சந்தை, காந்தி வீதி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆணையா் தெரிவித்தாா்.