தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

போடி, ஏப். 26: போடியில், தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் கண்ணன் (23). இவா் போடி பேருந்து நிலையம் பின்புறம் நின்று கொண்டிருந்தாா். அப்போது இங்கு வந்த போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த ராஜா மகன்கள் திவான், திலகா் ஆகியோா் முன்விரோதத்தில் கம்பால் கண்ணனை தாக்கியதுடன், கடப்பாறையால் அவரது இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தினா். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் போடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com