சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:57 pm

Din

உத்தமபாளையம்: ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள எல்லையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு மலைச் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுகிறது. இதைத் தடுப்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறைத் தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் ஆலோசனையின் படி, மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் விஜய காா்த்திக்ராஜா, துணை கண்காணிப்பாளா் ஜெகதீசன் ஆகியோரின் தலைமையில் போலீஸாா் கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், 1800 - 599- 5950 என்ற கட்டணமில்லா கைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என சுவரொட்டி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டது.