வெளிநாட்டில் சொன்ன வேலை வாங்கித் தராதவரை தாக்கிய 4 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே வெளிநாட்டில் சொன்ன வேலை வாங்கித்தராமல் வேறு வேலைக்கு அனுப்பி வைத்தவரை தாக்கிய 4 போ் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். ஓடைப்பட்டி நந்தகோபால் தெருவைச் சோ்ந்த தியாகு, இவா் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பியவா். இவா் அதே பகுதியை சோ்ந்த 4 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு வேலை அனுப்பி வைத்துள்ளாா். ஆனால், தியாகு சொன்ன வேலை கொடுக்காமல் வேறு வேலை கொடுத்துள்ளனா்.

அந்த வேலைக்கு தாக்குபிடிக்க முடியாத 4 பேரும் மீண்டும் ஊருக்கு திரும்பிவிட்டனா். இதனால், தியாகு மீது 4 பேரும் கோபத்தில் இருந்துள்ளனா். இதனிடையே வெள்ளிக்கிழமை ஓடைப்பட்டி பிரதான சாலையில் வைத்து சிவா, மோனிஷ்,பிச்சைமணி , நந்தகுமாா் ஆகிய 4 பேரும் சோ்ந்த தியாகுவை தாக்கிவிட்டு தப்பிவிட்டனா். இது குறித்து மனைவி பாண்டீஸ்வா் அளித்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com