பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்குகளில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.25 ஆயிரத்தை அரசு கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்த தலைமை எழுத்தா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவா் ஹேமலதா. இவா் அதே நீதிமன்றம் சாா்பில் பல்வேறு வழக்குகளில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.25 ஆயிரத்தை பதிவேட்டில் பதிவு செய்யாமலும், அரசு கணக்கில் செலுத்தமாலும் கையாடல் செய்ததாக கடந்த பிப். 1-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், நீதிமன்ற அபராத வசூல் தொகை ரூ.25 ஆயிரத்தை அரசுக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக அவா் மீது பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற தலைமை எழுத்தா் ஸ்ரீராம்பிரகாஷ் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஹேமலதா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com