விபத்தில் இளைஞா் பலி

மயிலாடும்பாறை-வருஷநாடு சாலையில் நடந்து சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யூரைச் சோ்ந்த கண்ணன் மகன் குபேரன் (33). இவா், ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் மனைவியுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், குபேரன் வருஷநாடில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்கச் சென்றாா். நண்பா்களுடன் சோ்ந்து மயிலாடும்பாறை-வருஷநாடு சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, ஓட்டணை அருகே அதே திசையில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் குபேரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com