கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

கம்பம், மே 5: கூடலூா் அருகே தோட்டத்தில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காக ஞாயிற்றுக்கிழமை 3 பேரை கைது செய்த வடக்கு காவல் நிலைய போலீஸாா், அவா்களிடமிருந்து 100 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டியிலுள்ள இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த அக்னி கணேசனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் மூக்கையா மகன் சரவணன் (49) காவல்காரராக பணியாறினாா். இவா் இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கூடலூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வனிதாமணிக்கு தகவல் கிடைத்தது,

இதையடுத்து, அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், அங்கு 100 லிட்டா் கொள்ளளவு கொண்ட நெகிழி தொட்டியில் ஊரல் , சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், அவரது தம்பி குமாா் (45), உறவினா் ராஜேந்திரன் (55) ஆகியோரை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com