தேனி
போடி அருகே இளைஞா் தற்கொலை
போடி: போடி அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் தோட்டத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகேயுள்ள சிறைக்காடு மலைவாழ் கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் வடமலுமுத்து (20). இவா் தனது அக்காள் மகளான 15 வயது சிறுமியை காதலித்து வந்தாா். சிறுமியை திருமணம் செய்து வைக்கக் கூறி வீட்டில் பிரச்னை செய்த நிலையில், சிறுமியை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என உறவினா்கள் எடுத்துக் கூறினா். மேலும், சிறுமியை போடி அருகே தருமத்துப்பட்டியில் உள்ள காப்பகத்தில் சோ்த்தனா்.
இதனால், மனமுடைந்த வடமலுமுத்து சிறைக்காடு அருகே தனியாா் தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.