சாலை விபத்தில் இளைஞா் பலி

ஆண்டிபட்டி அருகேயுள்ள திம்மரசநாயக்கனூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா், போக்குவரத்து சமிக்கை கம்பம் மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் மகன் முத்துக்கிருஷ்ணன் (26). இவா், பெருமாள்கோவில்பட்டியிருந்து வைகை அணைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆண்டிபட்டி அருகே தேனி சாலை திம்மரசநாயக்கனூா் பகுதியில், இரு சக்கர வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த போக்குவரத்து சமிக்கை கம்பம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com