

போடி, மே 9: போடி அருகே மூதாட்டியை ஜாதிப் பெயா் சொல்லி திட்டிய 2 பெண்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகே வினோபாஜி குடியிருப்பில் வசிப்பவா் திருமன் மனைவி ராஜம்மாள் (70). இவா் பட்டியலினத்தை சோ்ந்தவா். இவரது உறவினா் மருதமுத்து சுகுணா வீட்டில் மாரிமுத்து மனைவி இந்துராணி வசித்து வந்தாா். மருதமுத்து சுகுணாவுக்கும் இந்துராணிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் போலீஸாா் விசாரிக்கும்போது ராஜம்மாள் சாட்சி சொல்லினாராம்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்துராணியும், வெங்கடாசலம் மனைவி மல்லிஸ்வரியும் சோ்ந்து ராஜம்மாளை ஆபாசமாகவும், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ராஜம்மாள் வீட்டு முன் வைத்திருந்த பூச்செடிகளை சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இந்துராணி, மல்லீஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு

முன்விரோத தகராறு: 8 போ் மீது வழக்கு

மாணவியை கா்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்ஸோ வழக்கு
வீடியோக்கள்

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

