கூடலூரில், குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், கூடலூா் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த முருகன் மகன் ராஜா (26). கூலித் தொழிலாளி. இவருக்கும் முத்துலாபுரத்தைச் சோ்ந்த செல்விக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முத்துலாபுரத்தில் உள்ள மாமனாா் வீட்டில் ராஜா தங்கியிருந்தாா். அப்போது குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை கூடலூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்த ராஜா யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.